சோயிப் மாலிக் ஆட்டம் தொடங்குவதற்கு முன்பு தனது மனைவி சானியா மிர்சாவுடன் ஷீஷா பாரில் இருந்ததாகவும், சில வீரர்கள் புகைப்பிடித்தலில் ஈடுபட்டதாகவும் விடியோ வெளியாகியுள்ளன. இது குறித்து பாகிஸ்தான் நாட்டின் மனித உரிமைகளுக்கான அமைச்சர் ஷிரீன் மஸாரி (பெண்) கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, “இந்திய அணி மிகவும் தொழில் முறையுடன் ஒற்றுமையுடன் விளை யாடினார்கள். ஆனால் பாகிஸ்தான் அணியில் ஒற்றுமையின்றி வீரர்களிடையே பிரிவினை உள்ளது. மைதானத்தில் ஒரு அணியின் கேப்டன் கொட்டாவி விடும்போது அங்கு பீல்டிங் இல்லாமல் போய்விடுகிறது. ஆட்டம் தொடங்குவதற்கு முன்பு ஷீஷா பாரில் நிகழ்ந்த அவமானத்தை விட வேறென்ன எதிர்பார்க்க முடியும்? விளையாட்டில் வெற்றி, தோல்வி சகஜம் தான் என்றாலும் தொழில்முறையுடன் விளையாடவேண்டும் என ஷிரீன் மஸாரி வீரர்களை எச்சரித்துள்ளார்.